கிருஷ்ணகிரி, ஜூன் 30 –
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போதைப் பொருள் தடுப்பு, போக்சோ சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் பெரியசாமி தலைமை தாங்கினார்.
வழக்கறிஞர்கள் பெருமாள், பிரபாவதி, காவல் ஆய்வாளர் மஞ்சுளா, மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி M.ஜெயந்தி, M.A., ML., சிறப்புரையாற்றினார். அவர் மாணவர்களுக்கு போதைப் பொருட்களின் தீமைகள், போக்சோ சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த பல்வேறு ஆலோசனைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்வில் உதவி தலைமை ஆசிரியர் சக்கிவேல், ஆசிரியர்கள் முருகன், ராமலிங்கம், செந்தில், சுதேஷ்குமார், சரவணன், ராமஜெயம், ராஜா, சம்பத், சரவணன், ராஜேஷ்வரி, ராசா மற்றும் லீகல் எய்ட் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் சிவசெல்வம் நன்றியுரை வழங்கினார்.



