கிருஷ்ணகிரி,மே.28- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி ஒன்றியம்,அகசிப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி முன்னால் மாவட்ட பொதுசெயலாளர் மீசை அர்சுணன் மற்றும் பர்கூர் ஒன்றியம், தொகரப்பள்ளி ஊராட்சி பில்லகொட்டாய் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி முன்னால் நெசவாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், பர்கூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஞானவேல் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் முன்னிலையில், திமுகாவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு மதியழகன் எம் எல் ஏ பொன்னாடை போர்த்தி திமுக கரை வேட்டி வழங்கி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினேஷ், கிருஷ்ணகிரி நகர பொறுப்பாளர்கள் அஸ்லாம், வேலுமணி, மாவட்ட துணைத் தலைவர் கடலரசு சாவித்திரி உள்பட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர். பாஜக பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்ததால் பாஜகவினர் அதிர்ச்சி தகவல்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாஜக கட்சியினர் திமுகவில் மதியழகன் எம் எல் ஏ முன்னிலையில் இணைந்தனர்



