நாகர்கோவில், ஜன. 7 –
நாகர்கோவிலில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் பிரத்யேக பிரைடல் நகை கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பிரைட்ஸ் ஆப் இந்தியா ராம்ப்வாக் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. 5 பெண்கள் (மாடல்ஸ்) மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்சின் வித விதமான திருமண நகைகளை அணிந்து ராம்ப்வாக் வந்தனர். பின்னர் அந்த நகைகளின் சிறப்புகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. விழாவில் நாகர்கோவில் கிளை தலைவர் ரினித், வர்த்தக மேலாளர் துவாரகாநாத் ஆகியோர் பங்கேற்றனர்.
இதுபற்றி அவர்கள் கூறியதாவது: மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் பிரத்யேக பிரைடல் நகை கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகளாக தங்கம், வைரம், ஜெம்ஸ்டோன் மற்றும் அன்கட் நகைகளுக்கு சேதாரத்தில் 30 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் வைரத்தின் மதிப்பில் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை வருகிற 18-ந்தேதி வரை நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் வழங்கப்படுகிறது.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’, மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவைப்புகளில் உருவான ‘டிவைன்’ ஆகியவை இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 426 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகின் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, சேதாரம், கற்களுக்கான விலை, அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும், அதன் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம்.
வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானாலும் மாற்றி பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் போன்ற வாக்குறுதிகளை வழங்குகிறது. இவை தவிர மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூக பொறுப்பும் முக்கிய காரணமாக உள்ளது. தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என பல்வேறு சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



