புதுக்கடை, பிப். 17 –
புதுக்கடை அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் குஞ்சன் (85). இவர் சமீபகாலமாக ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். சம்பவதினம் வீட்டு முன்பக்கம் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மீண்டும் உடல் நிலை மோசமானதால் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவரை மேல்சிகிட்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பொன்னேசம் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


