தென்தாமரைகுளம்., ஏப். 23
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில்போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது . கல்லூரி விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் டி. சி. மகேஷ் தலைமை தாங்கினார் வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி வரவேற்று பேசினார் கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் கு. இளங்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
கன்னியாகுமரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு போக்சோ சட்டம் பற்றி உரையாற்றினார் கன்னியாகுமரி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ரியோலின் காவலன் உதவி செயலி பற்றி பேசினார் முடிவில் ஸ்ரீபிந்து நன்றி கூறினார் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.



