சுசீந்திரம், பிப். 26 –
பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பல கலைகளில் ஒன்றான வர்மக்களரி அடிமுறை தற்போது அழிந்து வரும் சூழ்நிலையில் அதனை மீட்டெடுக்கும் வண்ணம் பள்ளி குழந்தைகளுக்கும் பொது மக்களுக்கும் இந்த லெமூரியா வர்மக்களரி அடிமுறை தெரிந்து கொள்ளவும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலக கூட்டமைப்பு இணைந்து நடத்திய பல்கலைக்கழக பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 22ம் தேதி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நிர்வாகிகள் செல்வன், வைகுண்ட ராஜா, ரிஷாந்த் மற்றும் ஆசான்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.



