சென்னை, ஏப்ரல் 25-
பி எம் டபிள்யூ மோட்டாராட் இந்தியா நிறுவனம் பி எம் டபிள்யூ – எஃப் 450 ஜிஎஸ் மாடலை இந்தியாவில் நாளை அறிமுகம் செய்கிறது. ஜெர்மனியில் உள்ள “பிஎம் டபிள்யூ” மோட்டாராட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த வகை மாடல் இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளது.
பிஎம் டபிள்யூ குரூப் இந்தியாவின் தலைவரும் சி.இ.ஓ-வுமான ஹர்தீப் சிங் பிரார் கூறுகையில்: “ஜிஎஸ் ” பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், புதிய தலைமுறை பயணிகளுக்காக ” பி எம் டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் ” மாடல் இந்தியாவின் மாறுபட்ட சாலைகள் மற்றும் ஓட்டுநர் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நகர வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் இல்லாத திறந்த வெளிகளில் ஓட்டும்போது அதிக நம்பிக்கையை அளிக்கிறது. இந்தியாவின் வளர்ந்து வரும் மோட்டார் சைக்கிள் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கச் செய்வதும் எங்களது நோக்கமாகும். ” பிஎம்டபிள்யூ ” மோட்டாராட் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான சந்தையாக இந்தியா இருக்கிறது.
மேலும், இந்த பயணத்தை விரைவுபடுத்தவும், மக்களின் ஆர்வத்தை வளர்க்கவும், பங்கேற்பை விரிவுபடுத்தவும், ஒவ்வொரு ஓட்டுநரும் உலகை உண்மையிலேயே தங்களின் விளையாட்டு மைதானமாக மாற்றவும் உதவுவதில் எங்களது அர்ப்பணிப்பை எஃப் 450 ஜிஎஸ் காட்டுகிறது” என்று கூறினார்.



