களியக்காவிளை, ஆக. 29 –
களியக்காவிளையில் வீட்டின் பின்பக்க கதவினை திறந்து பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை அறுத்துச் சென்ற திருடனை போலீசார் கைது செய்தனர்.
களியக்காவிளை அருகே ஒற்றப்பனவிளை பகுதியை சார்ந்தவர் ஜெயக்குமார் மனைவி ஸ்ரீஜா. இவர் வீட்டின் தனியாக இருந்த போது வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து உள்ளே சென்ற காரக்கோணம் புல்லன் தேரி பகுதியை சார்ந்த சிமி குட்டன் (39), ஸ்ரீஜா கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சரவன் தங்க தாலியை அறுத்துச் சென்றுள்ளான்.
இது குறித்து ஸ்ரீஜா களியக்காவிளை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிமி குட்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


