தருமபுரி, ஜூலை 28 –
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் முன்பு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் கிருஷ்ணன் பொன்னுசாமி, அரிமா சங்க நிர்வாகிகள் தர்மன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பஸ் ஸ்டாண்ட் முன்பு அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல் கலாமின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்சியில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



