திருப்பூர், ஏப். 28 –
வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றுகிறவா்களுக்கான பணி ஒதுக்கீடு தொடா்பான ஆலோசனை நடந்தது. இதில் 8 தொகுதிகளிலும் பணியில் ஈடுபடும் 568 பேருக்கும் நாளை முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி (தனி), தாராபுரம் (தனி), காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் ஆகிய 8 தொகுதிகள் உள்ளது. இந்த 8 தொகுதிகளிலும் கடந்த 23ம் தேதி சட்டமன்ற தோ்தல் நடைபெற்றது. இதனைத்தொடா்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி. கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வருகிற 4ம் தேதி வாக்குகள் திறந்து எண்ணப்பட உள்ளன.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீ்ச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுகிற அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்வது தொடா்பான ஆலோசனை கூட்டம் இன்று காலை கலெக்டா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டா் மனிஷ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் தோ்தல் நடத்தும் அதிகாரிகளான திருப்பூர் (வடக்கு) சப் கலெக்டா் சிவப்பிரகாஷ், தாராபுரம் (தனி) சப் கலெக்டா் பெலிக்ஸ் ராஜா, காங்கேயம் உதவி கமிஷனா் (கலால்) பாலமுருகன், அவினாசி (தனி) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கல்பனா, திருப்பூர் தெற்கு தொகுதி மாநகராட்சி கமிஷனா் அமித், பல்லடம் தொகுதி மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன், உடுமலை தொகுதி சப் கலெக்டா் குமார், மடத்துக்குளம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி சதீஷ் மற்றும் கலெக்டரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 4ம் தேதி வாக்குகள் எண்ணுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் நாளன்று பணியாற்றும் அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு தொடா்பான ஆலோசனை நடைபெற்றது. வாக்கு எண்ணும் நாளன்று வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 408 அலுவலர்கள், தபால் வாக்கு எண்ணும் பணிக்கு 160 அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளா்கள், கண்காணிப்பாளா்கள், மேற்பார்வையாளா்கள், உதவியாளா்கள் என மொத்தமாக 568 பணியாளா்கள் ஈடுபட உள்ளனா்.
இவா்களுக்கான பயிற்சி வகுப்பு நாளை (புதன்கிழமை) மதியம் 2.30 மணிக்கு கலெக்டா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் அனைவருக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். வருகிற 2ம் தேதி இவா்கள் எந்தெந்த தொகுதிகளில் பணியாற்றுவார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படும். முதற்கட்டமாக இன்று வாக்கு எண்ணும் மையத்தில் இவா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முழு விவரத்துடன் பயிற்சி அளிக்கப்படும். தொகுதிக்கு தலா 14 டேபிள்கள் போடப்பட்டுள்ள நிலையில் அனைத்து தகவல்களும் இவா்களுக்கு தெரிவிக்கப்பட இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினா்.



