ஈரோடு, ஜூலை 21 –
கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜியை செங்குந்தர் மகாஜன சங்க மாநில துணைத்தலைவரும், செங்குந்தர் இன் பிஸ்னஸ் நிறுவனருமான நந்தகோபால் சந்தித்து பேசினார்.
அப்போது தென்காசி சங்கரன்கோவிலில் 15000 நெசவாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆவண செய்யுமாறு கேட்டு கொண்டார்.
மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவையும் அமைச்சரிடம் அவர் வழங்கினார். அமைச்சர் விஜய் பாலாஜி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின் போது ஆனந்த் மோகன் எம் எல் ஏ மற்றும் செங்குந்த மகாஜன சங்க மாநில இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.



