By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நீதிமன்ற உத்தரவின்படி 60 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி; குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நீதிமன்ற உத்தரவின்படி 60 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி; குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு
கனஂனியாகுமரி

நீதிமன்ற உத்தரவின்படி 60 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்ற அதிகாரிகள் முயற்சி; குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு

Last updated: July 25, 2025 11:51 am
July 25, 2025
42 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 25 –

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட சரல் விளை பகுதியில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் இன்றி குடியிருந்து வருபவர்கள் அன்னகிளி, பத்திரகாளி, ராமசாமி, ராஜேந்திரன் உள்ளிட்ட நான்கு குடும்பங்கள் ஆகும். இவர்கள் இப்பகுதியில் குடிசை அமைத்து அரசிற்கு மின்கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி முறையாக செலுத்தி ரேசன் கார்டு, ஆதார் கார்டு போன்ற அரசின் ஆவணங்களை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களின் குடியிருப்பு பகுதியின் பின்புறம் சுமார் 4 ஏக்கர் தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இந்த தென்னந்தோப்பை நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர் விலைக்கு வாங்கி தென்னந்தோப்பை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதால் அவர்களின் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு முன்புறமுள்ள குடிசை வீடுகள் இடையூராக இருப்பதால் இந்த குடிசைகள் அமைந்திருக்கும் பகுதி வழியே தான் வழிப்பாதை அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி இந்த குடிசை வீடுகளை இடித்து அகற்ற நேற்று பேரூராட்சி செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல் குமார் தலைமையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வீட்டில் குடியிருந்த நபர்களுக்கு எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின் இணைப்பை துண்டித்து வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து அப்புறப்படுத்தி ஜேசிபி வாகனம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. வீட்டில் குடியிருந்த மக்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் இந்த வீடுகளை இடிப்பதற்க்கு முன்பு இவர்கள் குடியிருப்பதற்க்கு மாற்று இடம் கொடுத்து விட்டு வீட்டை இடியுங்கள் என்று தடுத்து நிறுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. தகவலறிந்த காங்கிரஸ் மாநில வழக்கறிஞர் அணி பிரிவு பொருளாளர் ஜாண் சொளந்தர் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மற்றும் குடியிறுப்பு வாசிகளுடன் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு மாத கால அவகாசத்தில் அரசின் மூலம் இப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தரும்படி கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் நான்கு மணி நேரப் போராடத்திற்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அறிந்த வில்லுக்குறி பேரூர் காங் கமிட்டி தலைவர் பிரகாஷ் தாஸ், தக்கலை வட்டார காங் தலைவர் பிரேம் குமார் மற்றும் சிஐடியு கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர் சங்க உதவி செயலாளர் ரவிசந்திரன் மற்றும் வில்லுக்குறி பேரூராட்சி துணைத்தலைவர் ராமலிங்கம் உட்பட ஏராளமானோர் குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவை சேர்ந்த இருவர் வனத்துறையினரால் கைது
மார்த்தாண்டம் அருகே பைக் மோதியதில் மூதாட்டி பலி; வாலிபர் படுகாயம்
பொன்மனை பேருராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்குவது எப்போது?!
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

வாடிப்பட்டியில் துறை வாரிய அதிகாரிகள் வரவில்லை‌ என்றால் கூட்டத்தைப் புறக்கணிப்போம் விவசாயிகள் கூட்டத்தில் காரசார வாக்குவாதம்:

June 12, 2025
55 Views
கொடைக்கானல் கோடை விழா – 2024
அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு
திருக்கோவில் ஆவணி பெருந்திருவிழா
கன்னியாகுமரியில் கடலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சுற்றுலா பயணி; விரைந்து வந்து காப்பாற்றிய மீனவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account