மார்த்தாண்டம், செப். 5 –
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் மனைவி நேசம் ஞானவடிவு (65). இவர்களுக்கு சதீஷ்குமார் (34) என்ற மகன் உள்ளார். நேசம் ஞானவடிவு ஆட்டுக்கு புல் வெட்டுவதற்காக நட்டாலம் நான்கு வழிச்சாலையில் உள்ள முத்தலித்திட்டை என்னும் இடத்திற்கு சென்றார். பின்னர் அங்கு புல் வெட்டிகொண்டு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக் ஒன்று மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பைக்கை ஓட்டி வந்த மோபின் (18) என்பவர் படுகாயம் அடைந்தார். மோபினை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சேர்த்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மார்த்தாண்ட போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சதீஷ் குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


