சுசீந்திரம், செப். 11 –
சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம் புதூர் கலைஞர் காலனியை சார்ந்தவர் தனிஷ் (30). இவர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு விரதம் இருந்து மாலை அணிவித்து பறக்கை பகுதிகளில் கொட்டகை அமைத்து விரதம் இருந்து வந்துள்ளார். இவருடன் 10 நபர்களும் விரதம் இருந்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று மாலை கொட்டகையில் பூஜை செய்ய வேண்டி சாமி சிலை மறைக்கப்பட்டு இருந்த திரையை நீக்கிய கொட்டகைக்கு லைட்டு போட வேண்டி மின்சார ஒயரை இழுக்க முற்படும்பொழுது ஒயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
அவரை உடனடியாக நாகர்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது தந்தை நாகராஜன் கொடுத்த புகாரின் பெயரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


