தஞ்சாவூர், ஏப்ரல் 22 –
தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 23ந் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி நிலையங்களிலும் காலை 7:00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாக்குப்பதிவு நாளன்று போக்குவரத்து வசதி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் 1950 என்ற உதவி எண் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 18004259464 என்ற கட்டணம் இல்லை எண்ணை தொடர்பு கொண்டு வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி விவரம், வசிப்பிட முகவரியை வழங்கினால் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அரசு வாகனம் மூலம் உரிய போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



