தென்காசி, ஜூன் 30 –
பொது வெளியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ தொடர்பாக தவெக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி தென்காசி தெற்கு மாவட்ட திமுக மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணிஸ்ரீகுமார் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலைக்கதிரவன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தியும், அவரது செயலுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, மாவட்டப் பொருளாளர் ஷெரிப், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, சேசுராஜன், சேக் தாவூது, ஆறுமுகச்சாமி, அவைத் தலைவர் முத்துப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் முகமது ரஹீம், ராஜேஷ்வரன், தமிழ்ச்செல்வி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மஹ்முதா, தென்காசி நகரச் செயலாளர் சாதிர், சுரண்டை நகரச் செயலாளர் கணேசன், செங்கோட்டை நகரச் செயலாளர் வெங்கடேசன், கடையநல்லூர் வடக்கு நகரச் செயலாளர் அப்பாஸ், கடையநல்லூர் நகரச் செயலாளர் பீரப்பா, ஒன்றியச் செயலாளர்கள் அழகு சுந்தரம், ரமேஷ், சீனித்துரை, அன்பழகன், ஜெயா ஐயப்பன், திவான் ஒலி, ரவிசங்கர், மணிகண்டன், சுரேஷ், பேரூர் கழகச் செயலாளர்கள் குட்டி, முத்தையா, ராஜராஜன், கோபால், சிதம்பரம், வெள்ளத்துரை, முகமது உசேன் என்கின்ற தங்கப்பா, கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் மூப்பன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் எட்வின், கதிர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வார்டு மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட திமுக வினரை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை மற்றும் அரசு பேருந்துகள் மூலம் கீழப்புலியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர்.



