திருவண்ணாமலை, ஜூன் 23 –
திருவண்ணாமலை மாவட்டம் மேல் நாச்சிபட்டு மான் குட்டை கிராமத்தில் கூழ் ஊற்றும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் காளியம்மன், மாரியம்மன், கெங்கையம்மன் ஆகிய மூன்று தெய்வங்கள் கெரகமாக வேப்பிலை, பூமாலையாக ஜோடித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஊர் பொது மக்களுக்கு காட்சியளித்து பொதுமக்கள் கேட்கும் வரங்களை கொடுத்தும் ஊர் வலமாக எடுத்துச் சென்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் கடைசியில் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் மேல் கூழ் ஊற்றி ஆடலுடன் திருவிழா முடிவடைந்தது. இந்த திருவிழாவானது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



