திருப்பத்தூர், ஜூன் 28 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. இந்த விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு கோரிக்கை குறை நிறைகளை குறித்து பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் விவசாயி ஒருவர் ஆதங்கத்துடன் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய் விலை வீழ்ச்சியின் காரணமாக வாங்க வியாபாரிகள் முன் வரவில்லை. மரத்தில் பழுத்து அழுகி சேதமாகிறது. போட்ட முதலீடு கூட எடுக்க முடியாமல் திணறி வருவதாகவும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதேபோல் விவசாயிகள் வாழ்வாதாரமாக விளங்க கூடிய தென்னைமரம் குருத்து பூச்சியால் தென்னைமரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. உடனடியாக நிருவாகம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மரத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேதனையுடன் கோரிக்கை முன் வைத்தனர்
அதேபோல் சானாங்குப்பம் விவசாயி ஒருவர் கூறுகையில்: விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள காய்கறிகளை விற்க ஆம்பூர் பகுதியில் ஒரு உழவர் சந்தை கூட இல்லாமல் அவதிக்குள்ளாகி வருவதாக வேதனை தெரிவித்தனர். மேல் சானாங்குப்பம் என்றாலே யாவரும் பெண் கூட கொடுக்க முன் வருவதில்லை சாலை வசதிகள் இல்லாத காரணத்தினால் சாலை வசதிகள் செய்து தர கோரிக்கை முன் வைத்தனர்.
அதே போன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்ற கடனை திருப்பி கட்டிவிட்டு மீண்டு கடன் பெற வேண்டுமென்றால் அலை கழித்து வருவதாகவும் கிலியரன்ஸ் சான்றிதழ் அனைத்து வங்கிகளிலும் வாங்க சொல்லி வலியுறுத்தி கடன் வழங்க தாழ்த்தி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். அதேபோன்று நெல் கதிர் அடிக்கும் நெற் களஞ்சியம் கட்டி தருவதாக காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்தனர்.
வாணியம்பாடியில் உழவர்கள் தாங்கள் கொண்டு வரும் காய்கறிகள் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்து முறையாக கொண்டு வந்து சந்தைப்படுத்த முடியவில்லை. உரிய இடத்தில் முறையாக தூய்மை செய்து விவசாயிகள் மக்களிடம் நேரடியாக சந்தையிடுதலை உறுதிபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
திருப்பத்தூரில் திருமால் நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் இரவு நேரங்களில் பயணிப்பது மிகுந்த அச்சத்துடன் செல்கின்றனர். ஏரிக்கறைப் பகுதியில் அதிகமான குப்பைகளை கொட்டி பெரும் அசுத்தம் ஏற்படுத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக பல முறை மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை. நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் பூங்காவில் அதிகமான குப்பையும், பராமரிப்பு இன்றியும் உள்ளது. பக்கத்து மாநிலமான பெங்களூரில் சென்று பாருங்கள். பூங்காக்களை அவ்வளவு அழகாக வைத்துக் கொள்கிறார்கள். அதை அனைவரும் சென்று பார்க்க வேண்டும் என்று கூறினார்.
விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுஜாத்தா, தோட்டக்கலை துணை இயக்குநர் தீபா, வேளாண் துறை, தோட்ட கலைத் துறை, மின் துறை, தீயணைப்பு துறை, காவல் துறை உள்ளிட்ட துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.