திருப்பத்தூர், ஜூன் 26 –
திருப்பத்தூரில் அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளை சார்பில் மாவட்ட அளவில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மற்றும் உயர்கல்வி படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும், ஆதரவற்ற உடல் நிலை பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியானது, திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் துவங்கிய நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் சேட்டு வரவேற்புரை ஆற்றினார். மாநிலத் துணைச் செயலாளர் சேகர், மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பின்னர் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்தாண்டு 12 மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தலா ஜந்து ஆயிரம், நான்கு ஆயிரம், மூன்று ஆயிரம், ஊக்க தொகையாகவும், கல்லூரில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மற்றும் கேடயமும், ஆதரவற்ற மற்றும் உடல் நலன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, உணவுப்பொருள்கள் போன்றவற்றை மாநில தலைவர் அப்பாதுரை வழங்கினார்.
பின்னர் பொதுமக்கள் இடையே உரையாற்றும் போது கல்வி அனைவரது வாழ்க்கையும் முன்னேற்றுவதாகவும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் படித்து அடுத்த முறை இன்னும் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற வேண்டும் என வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட துணைத் தலைவர் இளவரசி நன்றி கூறினார். இறுதியில் மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் பன்னீர்செல்வம், மாநிலச் செயலாளர் ஆனந்தி அப்பாதுரை, மாநிலத் துணைச் செயலாளர் சேகர், மாநில பொருளாளர் தேவராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் மனோகரன், மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுர், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



