திருச்சி, ஜூன் 9 –
திருச்சி தீரன்நகர் அருகே திண்டுக்கல் பிரதான சாலையில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


