தஞ்சாவூர், ஜூன் 4 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான வயது வரம்பினை தளர்த்துவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வயது தளர்வு செய்து உதவித்தொகை வழங்கிட இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 35 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் தகுதியுடைய 22 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி தொகை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சவுமியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



