திருச்சி, மே 8 –
திருச்சி மாவட்டம் வாமடம் பகுதியில் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த ஒன்பது வயது சிறுமியை கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த சின்ன ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு மே 6 மகிளா கோர்ட்டில் நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், குற்றவாளி சின்ன ராஜாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.



