திருச்சி, ஏப். 27 –
திருச்சி புத்தூர் வி.என்.பி தெரு பகுதியில் கஞ்சா போதையில் இளைஞர்கள் ரகளையில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. நேற்று இரவு, அப்பகுதியில் இளைஞர்கள் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர் தாக்கி, கூச்சலிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இது குறித்த சிசிடிவிகாட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினந்தோறும் இப்பகுதி மக்கள் கஞ்சா போதை இளைஞர்களால் அவதிப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



