திருச்சி, மே 25 –
திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2026-27ம் கல்வி ஆண்டிற்கான டிப்ளமோ முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும், இதர பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் கல்லூரி இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாக கல்லூரிக்கு வந்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.



