கோவை, ஜூலை 13 –
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்காக வட்டி இல்லா பயிர் கடன்களை பெற்று விவசாயம் செய்து வந்தோம். விவசாயத்தையே முழுமையாக நம்பி விவசாயிகள் குறிப்பாக பருவநிலை மாற்றம், ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, ரசாயன உர விலைகள் பல மடங்கு ஏற்றம், வனவிலங்கு தாக்குதல் தண்ணீர் பற்றாக்குறை, டீசல் பெட்ரோல் விலை ஏற்றம் பண்ணை இயந்திரங்கள் விலை உயர்வு, இடுபொருட்கள் போன்ற பல்வேறு சூழ்நிலைக்கு இடையில் விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறோம்.
மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி மகாராஷ்ரா அரசு முழுமையாக தள்ளுபடி செய்துள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தொகையினை தமிழக அரசு நிதி சுமையாக கருதாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முழுமையாக தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து இடைக்கால நிதி நிலை பட்ஜெட் கூட்டத்தொடரில் முழுமையான நிபந்தனையற்ற பயிர் கடன்கள் தள்ளுபடி அறிவிப்பு வரும் வரை விவசாயிகளிடமிருந்து எந்த விதமான கடன்களையும் வசூலிக்க கூட்டுறவு சங்க அதிகாரிகள் நிர்பந்திக்க கூடாது என்றும் தமிழ்நாடு முதல்வர் விவசாயிகளின் நலன் கருதியும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ள தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றிட இந்த போராட்டத்தின் வாயிலாக வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.



