தஞ்சாவூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி, தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் மேலாண்மை நிறுவனம், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் 2 மையங்கள், மானம்பு சாவடி கிறிஸ் தவ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆகிய 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது
இந்த தேர்வுக்கு தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை ,திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 4464 மாணவ மாணவிகள் விண்ணப் பித்து இருந்தனர்.
நீட் தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, இருந்த நிலையில் காலை 10 மணி முதலே மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் மையங்களுக்கு வர தொடங்கினர் வெளியூர்களில் இருந்து வந்த மாணவர்கள் பலர் தனது பெற்றோர்களுடன் வந்திருந்தனர்
தேர்வு மையங்களை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந் தது. நீட் தேர்வு மையத்தை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம், கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் பார்வையிட்டு ஏற்பாடுகளைஆய்வு செய்தனர்



