சேலம், ஆக. 4 –
தமிழக முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காகவும் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி இன்றைய தினம் தமிழக முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தையும், கன்னங்குறிச்சியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், மேச்சேரியில் ரூ 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம் ரூ 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் என ரூ 2.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நான்கு புதிய கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து கட்டிடங்களை பார்வையிட்டார்.



