நாகர்கோவில், மே 15 –
தக்கலை அருகே உள்ள கேரளபுரம், கீழப்பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (37). இவர் மேட்டுக்கடை சந்திப்பில் செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி இரவு 9 மணி அளவில் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
மறுநாள் காலை (நேற்று) கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கடையில் இருந்த 46 ஆயிரம் பணம், 5 ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள், 10 சாதாரண செல்போன்கள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.
இது குறித்து மணிகண்டன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


