By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு: சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சென்னை ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு: சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!
கிருஷ்ணகிரிசென்னைதமிழ்நாடு

சென்னை ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு: சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!

Last updated: June 25, 2026 7:34 pm
June 25, 2026
26 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 25 –

நாகரசம்பட்டி காவல் சரகம் செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சென்னை மாநகர ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் அருண்குமார் (28), சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி – செந்தாமரை தம்பதியர். இவர்களது மகன் அருண்குமார் (28, PC 52336). இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் (1st Platoon) இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்தார். 2018ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி ராணிப்பேட்டையில் நடைபெற்ற தனது நண்பரின் திருமண விழாவில் அருண்குமார் கலந்துகொண்டார். திருமணம் முடிந்து நண்பர்களுடன் மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலை விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காவலர் அருண்குமார், உடனடியாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன்.24.அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சென்னை போரூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, காலை 10.30 மணியளவில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, அருண்குமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

இன்று மாலை, நாகரசம்பட்டி காவல் சரகத்திற்குட்பட்ட மருதேரி கிராமத்தில் உள்ள மயானத்தில், காவலர் அருண்குமாரின் உடலுக்கு காவல் துறை உயர் அதிகாரிகள், சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், காவல் துறை விதிமுறைகளின்படி 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இளம் காவலரின் இந்த மறைவு அவரது குடும்பத்தினரிடையேயும், கிராம மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி அருகே கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்கள் மீது நடவடிக்கை பாயுமா
பாலக்கோடு சுங்கசாவடியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
நாகர்கோவிலில் சிறுவனுக்கு சரமாரி கத்திக்குத்து; 3 பேர் மீது வழக்கு
விளையாட்டு மைதானத்தில் மராத்தான் விளையாட்டு போட்டி
போச்சம்பள்ளி அருகே சாமண்டபட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர்

June 21, 2024
159 Views
இராமநாதபுரம் மாவட்டம் BS6 ரக 7 புதிய பேருந்து
கலசலிங்கம் பல்கலையில் விண்ணப்ப விநியோகம் துவக்கம்
தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மக்கள் நல மருத்துவ சேவை விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account