சிவகங்கை, செப். 22 –
சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 39 வது அமைப்புதின விழா கூட்டமானது சிவகங்கை தனியார் அரங்கத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளர் இரா. இராதாகிருஷ்ணன் தொடக்கவுரை நிகழ்த்திட சங்கத்தின் மாவட்டத் தலைவர் லூயிஸ் ஜோஸப் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகன்னாதசுந்தரம் முன்னிலை வகித்திட மாவட்ட இணைச்செயலாளர்களான நா.கலைச்செல்வம், இரா. ஷகீலா, வட்டாரத் தலைவர் பா. இராஜேஷ்குமார், மாவட்ட மகளிரணி கார்த்திகைமதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா, சிறப்பு அழைப்பாளர் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன், சங்கத்தின் மாநில பொருளாளர் மா. விஜயபாஸ்கர், பொருளாளர் கரு. பெரியசாமி, உதவி பொறியாளர் சையது இபுறாஹீம், துணைத்தலைவர் பா. தனபால், செயற்குழு உறுப்பினர் ஜெ. பாஸ்கரன், துணைத்தலைவர் வேலுச்சாமி, நிர்வாகிகள் மலர்விழி, ஷேக் அப்துல்லா, சிவா, பிச்சை, மீனா, சரத்பாபு உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி, சங்க ஒற்றுமை குறித்து நிர்வாகிகள் பலரும் பல்வேறு தலைப்புகளில் பேசினர். நிகழ்ச்சியின் இடையே கவிஞர் வைகை தமிழ்க்கனல், வைகை பிரபா ஆகியோரது சமூகப் பாடல்கள் இடம்பெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அசைவ உணவு பரிமாறப்பட்டது..



