சிக்கல், ஜூன் 22 –
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிய கூடுதல் வகுப்பறை பள்ளிக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம். சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் புதிய கட்டடத்தை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவன துறை அமைச்சர் பெ.மதன் ராஜா திறந்து வைத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, பொதுப்பணி துறை கட்டுமானம், பராமரிப்பு செயற்பொறியாளர் குருதி வேல் மாறன், கடலாடி தாசில்தார் பரமசிவன், கடலாடி வட்டார வளர்ச்சி ஆணையர் ஜெய ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.



