நாகர்கோவில், மார்ச் 19 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் பூங்கோதை குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று அவர் அங்கு வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். குறிப்பாக கடியப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சரல்விளை அரசு நடுநிலை பள்ளி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டார்.
தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றி எந்தவித முறைகேடுகள் இன்றி தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அலுவலர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது தேர்தல் பிரிவு அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.



