குளச்சல், ஏப். 27 –
குளச்சல் அருகே ரீத்தாப் ரம் பகுதியை சேர்ந்தவர் பென்னட் சிங் (42). கப்பலில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவரது நண்பர் ஆசீர் நேசராஜ் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் பென்னட்சிங் அவரது மற்றொரு நண்பருடன் ஆசீர் நேசராஜை பார்த்து உடல் நிலை குறித்து விசாரிக்க பைக்கில் சென்றுள்ளார்.
ஆனக்குழி என்ற பகுதியில் செல்லும் போது பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த ரோனிஸ் மற்றும் இருவர் சேர்ந்து பென்னட் சிங்கையும் நண்பரையும் தடுத்து நிறுத்தி தகராறு செய்து, தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பென்னட் சிங்கும் நண்பரும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள். புகாரின் பேரில் குளச்சல் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


