கிருஷ்ணகிரி, ஜூலை 23:
நடிகர் சூர்யாவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை சிறப்பாக நடத்தினர். சமூக நலன் மற்றும் மனிதநேயத்தை முன்னிறுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் செபஸ்டின், வெங்கட்ராமன் மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட ரசிகர் மன்றத்தின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்கள் திருமால் ராஜதுரை, குழலரசன் மற்றும் ஊத்தங்கரை ஒன்றிய தலைவர் சுதாகர், ஆகியோரின் தலைமையில் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
மேலும், ஒன்றிய மற்றும் நகர மன்ற நிர்வாகிகளான சந்தோஷ், அஜய், தர்மேந்திரன், தீபக் ஆகியோரும், ரசிகர் மன்ற நிர்வாகிகளான தர்மதுரை, அன்புதுரை, சூர்யா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.
இரத்ததான முகாமில் ஏராளமான ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்து மனிதநேயப் பணியில் பங்கேற்றனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரத்ததானம் வழங்கிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.



