கமுதி, ஜூன் 18 –
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்கள் மற்றும் சாலையோரங்களில் காட்டுப்பன்றிகள் நடமாடுவதால் பயிர்கள் சேதமடைவதுடன், வாகன விபத்துகளும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
எனவே, பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றிகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



