ஈரோடு ஏப் 11
ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு 37 ம் ஆண்டாக பால்குடம் தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
அதன் தொடர்ச்சியாக நேற்று 3000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. இதை ஈரோடு டவுன் மதுவிலக்கு டிஎஸ்பி சண்முகம் துவக்கி வைத்தார். சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான அம்மன் டெக்ஸ் நமச்சிவாயம் மாரியம்மன் டெக்ஸ் பழனிச்சாமி,
ஜி எல் பேப்ரிக்ஸ் குருபரன், மாதேஸ்வரன் மற்றும் ராமசாமி ஜவுளி வியாபாரிகள், சொக்கநாத வீதி ஜவுளி வியாபாரிகள்,மற்றும் வெங்கடாசலம் வீதி ஜவுளி வியாபாரிகள் சார்பாக இந்த அன்னதானம் நடந்தது.



