தருமபுரி, ஜூன் 10 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 6வது முறையாக கழகம் சார்பில் வேட்பளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம் எல் ஏ பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அடிலம், இண்டமங்கலம், ஏ.முருக்கம்பட்டி, பைசுஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட 50 கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றினை தெரிவித்தார். அப்போது கழக எம்எல்ஏக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்து சிறப்பு செய்து உற்சகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



