திருப்புவனம், ஆக. 28 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கிழக்கு ஒன்றியம் கணக்கன்குடி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தினை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றியக்கழக செயலாளர் ஏனாதி எம்.ஏ. கடம்பசாமி, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் சொக்கனாதிருப்பு டி.ஆர். சேகர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அச்சங்குளம் முருகன், முனைவர் இளங்கோவன், ஊராட்சி மேனாள் தலைவர்கள் கவிதா முருகன், விஜயா ஆறுமுகம், மடப்புரம் அப்பாச்சாமி, யோகேஷ் அம்பலம், இலக்கிய அணி பிரபு உள்ளிட்ட ஒன்றிய, கிளைக்கழக திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



