ஈரோடு, அக்டோபர் 31 –
ஈரோடு அக்ரகார வீதியை சேர்ந்த பொது மக்கள் சந்திர சேகரன் தலைமையில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியத் திடம் ஒரு மனு கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சி 55 வது வார்டில் கடந்த 25 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். இங்கு 25 ஆண்டுகளாகவே சுகாதார பணிகள் இல்லாமல் உள்ளது. இதனால் நாங்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்.
மேலும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன போக்குவரத்து சிரமமாக உள்ளது. தெரு விளக்குகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. கழிவு நீர் செல்லாமல் அடைபட்டு தேங்கி துர் நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உருவாகி டெங்கு மலேசியா போன்றவைகளினால் பாதிக்கப்படுகிறோம். தெருநாய்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது.
அக்ரகார வீதி, பெரியார் வீதி, கச்சேரி வீதிகளில் உள்ள மின் விளக்குகள் மீது மரக்கிளைகள் படுவதால் தெருவில் வெளிச்சம் தெரிவது இல்லை. எனவே அந்த மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். அக்ரகார வீதி அன்னை மேரி பள்ளி செல்லும் சாலையில் உள்ள மின் கம்பம் மற்றும் காரை வாய்க்கால் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் சாய்ந்துள்ள மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


