ஈரோடு, மே 18 –
ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டினையொட்டி பட்டமளிப்பு விழா நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில் நடந்தது. நந்தா கல்வி அறக்கட்டளையின் அங்கத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி தொழில்நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ரகுபதி ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் சர்வீஸ்நவ் மென்பொருள் நிறுவனத்தின் மூத்த மேலாளர் கோகுல கண்ணன் நரசிம்மன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரவரிசையில் இடம் பெற்ற 34 மாணவர்கள் இளங்கலை மாணவர்கள் 621 பேர் முதுகலை மாணவர்கள் 104 பேர் என மொத்தம் 725 மாணவர்களுக்கு பட்டயங்கள் வழங்கி பேசினார்.



