ஈரோடு, ஜூன் 30 –
ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் மூகாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இங்கு உலக அமைதிக்காக ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது.
50 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த யாகம் நேற்றும் நடந்தது.
அப்போது வேதங்கள் முழங்க மூகாம்பிகை அம்மனுக்கு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம் நடந்தது. மேலும் சத்திய நாராயணா பூஜையும் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
உலகத் தமிழ் ஜோதிட ஆய்வு நிறுவன தலைவர் ஓம் உலகநாதன் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் அறங்காவலர் டாக்டர் சுந்தரராஜ் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



