ஈரோடு, அக். 7 –
ஈரோடு மாவட்ட இந்து ஆட்டோ முன்னணி செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: ஆட்டோ தொழிலாளர்களுக்கு கடந்த 15 ஆண்டு காலமாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் வாகன அதிகரிப்பால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திரா அரசாங்கம் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆட்டோ டிரைவர் சேவை என்று திட்டத்தின் மூலமாக 15,000 ரூபாய் வழங்குகிறார்கள். அதேபோன்று தமிழகத்திலும் ஒவ்வொரு ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கும் ரூபாய் 15,000 நிதி உதவி வழங்கிட கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



