விளாத்திகுளம், ஜூலை 18 –
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும், இந்த ஆடி மாதத்தில் தொடர்ந்து மாதம் முழுவதும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், குறிப்பாக வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள், குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு, அம்மனை நினைத்து வழிபாடு நடத்தினர். மேலும் சுமங்கலி பெண்கள் தங்கள் மாங்கல்ய பலத்திற்காகவும் குடும்ப ஒற்றுமை மற்றும் உலக நன்மைக்காகவும் சிறப்பு வழிபாட்டை மேற்கொண்டனர்.



