By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விநாயகர் சிலைகளுக்கு 5 நாள் கெடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > விநாயகர் சிலைகளுக்கு 5 நாள் கெடு
ஈரோடுதமிழ்நாடு

விநாயகர் சிலைகளுக்கு 5 நாள் கெடு

Last updated: September 11, 2026 4:21 pm
September 11, 2026
3 Views
Share
SHARE

ஈரோடு, செப்.11:
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலைகள் நிறுவுதல் மற்றும் நீரில் கரைத்தல் தொடர்பான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், விநாயகர் சிலைகள் நிறுவத் திட்டமிடும் பொறுப்பாளர்கள், சிலை வைக்கப்படவுள்ள இடம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தால் நில உரிமையாளரிடமும், அரசு நிலமாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமும் தடையின்மைச் சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஒலிபெருக்கி அமைக்க சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் இடங்களில் தற்காலிக பந்தல்கள் அமைக்கும்போது தீ பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும். தற்காலிக மின் வசதி பெற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சுத்தமான களிமண்ணால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வண்ணங்களைப் பயன்படுத்தி சிலைகள் தயாரிக்கக் கூடாது. தற்காலிக பந்தல்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் அமைக்கப்படக் கூடாது என்பதுடன், பொதுமக்கள் பந்தலுக்குள் சென்று வழிபட்டு பாதுகாப்பாக திரும்பும் வகையில் போதிய இடவசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், சிலை அமைப்பாளர்கள் பந்தலில் போதிய முதலுதவி உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பந்தலுக்கு அருகில் வைக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட துறைகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட 5 நாட்களுக்குள் அவற்றை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேன்மொழி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

“அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க தலைமைப் பண்பு இல்லாததே காரணம்” – பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்
கமுதி க்ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டி விருது வழங்கினார்
பானி பூரி தயாரித்து விற்க அனுமதி வாங்க வேண்டும்
ராக்கெட் ஏவுவதில் தனியார் பங்களிப்பு நல்லது: முன்னாள் விஞ்ஞானி இளங்கோவன் பேட்டி
ஒற்றுமை, சகோதரத்துவம் வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும்; விஜய் வசந்த் எம்.பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

பெண்கள் புடவை அணிவகுப்பு ஓட்டம்

February 12, 2025
80 Views
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி
பாலிடெக்னிக். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இந்திய திருநாட்டின் 79 வது தேசிய‌ கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர்
கல்வி சேவை விருது பெற்ற பு.சந்திரகாந்த் புஷ்பராஜ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account