மதுரை, ஆகஸ்ட் 15 –
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இந்திய திருநாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் நாட்டின் 79-வது சுதந்திர தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து 42 பயனாளிகளுக்கு ரூபாய் 42.21 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மதுரை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட முதல் நிலை அலுவலர்கள், காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 314 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.



