மதுரை மே 21,
மதுரை திருவாதவூர் திருமறைநாத சுவாமி திருக்கல்யாணம்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான திருவாதவூர் அருள்மிகு திருமறைநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று 20-5-24 ந் தேதி காலை 9.30 மணி முதல் 10 – 30 மணிக்குள் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி திருக்கல்யாண நிகழ்ச்சியில் இணை ஆணையர் / நிர்வாக அதிகாரி ச. கிருஷ்ணன், உதவி ஆணையர் / நேர்முக உதவியாளர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் P. K.M. செல்லையா, சீனிவாசன் மற்றும் திருக்கோயில் கண்காணிப்பாளர்கள். பணியாளர்கள் , பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணம் முடிவுற்றவுடன் பக்தர்கள் அனைவரும் சிறப்பு அன்னதான விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



