By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாறுகால் ஆக்கிரமிப்பு; இராணுவ வீரர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > வாறுகால் ஆக்கிரமிப்பு; இராணுவ வீரர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தென்காசி

வாறுகால் ஆக்கிரமிப்பு; இராணுவ வீரர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: September 9, 2025 1:08 pm
September 9, 2025
63 Views
Share
SHARE

தென்காசி, செப். 9 -தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட குலசேகரப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட 2-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் துரை – செல்வி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள். இருவரும் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு இராணுவ வீரர்களின் தாய் தந்தையான துரை – செல்வி இருவரும் வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் குலசேகரபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு கீழத்தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவுநீர் செல்லும் வகையில் வாறுகால் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கழிவு நீர் வாறுகாலுக்கு குடியிருப்புகளில் இருந்து கழிவு நீர் செல்ல முடியாத வகையில் சிலர் தடுப்புகளை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் வாறுகாலில் செல்ல முடியாமல் தெருவின் மத்தியில் செல்வதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் பொது மக்களும் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.

வாறுகால் ஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி சென்ற சில மணி நேரத்தில் மீண்டும் அதே இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த சுதா என்பவர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இராணுவத்தில் பணிபுரியும் எனது மகன்கள் ஊருக்கு வந்தால் மகள்களை பொய் புகார் அளித்து போக்சோவில் சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டி வருவதால் எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் எங்கள் தெருவில் உள்ள வாறுகால் ஆக்கிரமிப்பை முறையான அதிகாரிகளை வைத்து அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் புகார் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து யூனியன் அதிகாரிகளுக்கு வாறுகால் ஆக்கிரமிப்பை முறைப்படி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

செல்போன் கடை உரிமையாளருக்கு பாதுகாப்பற்ற சூழல்
வழக்கறிஞர் அணிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
உழவர்களை நேசிப்போம் சிறப்பு நிகழ்ச்சி
சங்கரன்கோவில் அருகே கோயில் விழாவில் தீ விபத்து
சங்கரன்கோவில் நகராட்சி பகுதி வியாபாரிகளுக்கானபிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

உணவு கூடத்திற்கு 5 மின்விசிறிகள்

December 26, 2024
54 Views
மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்
கிருஷ்ணகிரியில் உள்ள தனிஷ்க்கில் “அகல்யம்” புதிய நகை தொகுப்பு அறிமுகம்
திமுக அரசு நெருக்கடியில் இருக்கிறது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account