தென்காசி, மார்ச் 24 –
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு மக்களின் தேவைகளை அறிந்து தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யும் நோக்கில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வராஜ் தலைமையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினர் செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்தார். ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். கல்வி, விவசாயம், வணிக மேம்பாடு மற்றும் உள்ளூர் கட்டமைப்பு வசதிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளும் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. பெறப்பட்ட இந்தக் கருத்துக்கள் அனைத்தும் கட்சியின் தலைமைக்கு அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.



