திருச்சி, ஏப்ரல் 25 –
லால்குடி அருகே சிறுதையூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி பாஸ்கரன் (75), லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்தபோது திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.



