நாகர்கோவில், ஜன. 23 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து திருக்குறள் மாநாடு இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெறுகிறது. இதில் எம்பி விஜய் வசந்த் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவருமான. திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் லியோனி கூறுகையில், “மோடி மாற்றத்தை ஏற்படுத்துவார் என கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தமிழகத்தில் தாமரை மலரும் இந்திய கூட்டணி வெல்லும் என்று இதுவரைக்கும் அவர்கள் சொன்னதும் நினைத்ததும் நடக்கவில்லை. அது போல் தான் 2026லும் நடக்கும். அதிமுக உடன் கூட்டணி வைத்திருந்த போதும் அவர்கள் ஆசை நிறைவேறவில்லை. இன்னும் பல உதிரி கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியும் அதன் திட்டங்களும் அந்தக் கூட்டணி பலமும் மிகப்பெரிய வெற்றியை அந்த கூட்டணி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு கொடுக்கும்.
அமுமுகவும், அதிமுகவும் கூட்டணி தண்ணியும் மண்ணெண்ணையும் சேர்ந்து போல்தான். தண்ணீயும், மண்ணெண்ணெயும் சேர்ந்தால் பிரயோஜனம் இல்லை. தண்ணீரையும் பயன்படுத்த முடியாது மண்ணெண்ணையும் எரிக்க முடியாது. இந்த கூட்டணி தேர்தலுக்கான சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த கூட்டணிய மக்கள் மிகப்பெரிய அளவில் புறக்கணிப்பார்கள். திமுகவுடன் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்பது அரசியல் கட்சிகளுக்கான தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவோம் என விஜய் தெரிவித்த நிலையில், தவெக தலைவர் விஜயுடன் பங்கு வாங்க ஒருத்தர் கூட போகவில்லை. பங்கு கொடுக்கிறேன் பங்கு கொடுக்கிறேன் என விக்கிரவாண்டில் இருந்து தெரிவித்து வருகிறார். வெற்றி பெற்று வந்தால் தானே பங்கு கொடுப்பார். உங்க பங்கு மேல நம்பிக்கை இல்லை என அவருடன் யாரும் கூட்டணி சேர விரும்பவில்லை. அதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது என்பது முக்கியமான நோக்கம் இப்போது இல்லை.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தரக்கூடிய நிதிகளை தராமல் இருப்பதை மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். கடைசி நேரத்தில் தமிழகத்தில் பல திட்டங்களைக் கொண்டு வருவோம் என தெரிவிப்பார்கள். அது எப்படி இருக்கிறது என்றால் எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி குட்டிச்சுவராக இருக்கிறதோ அதே போல் தான் இருக்க போகிறது. ஆகவே மோடியின் வார்த்தைகள் மாவு இல்லாமல் சுடப்படுகின்ற வடைகள்தான், அதை தமிழக மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். ஆகையால் இப்போது மோடியின் வருகை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கலாம்; வெற்றியை கொடுக்காது.
திருக்குறளை மோடி எடுத்திருக்க கூடிய முன்னெடுப்பு எந்த இடத்திற்கு போகிறாரோ, அந்த இடத்திற்கு தகுந்தார் போல் வேஷமிடுகிறார், மோடி திருக்குறளில் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. தமிழில் உள்ள திருக்குறளை பிரதமர் மோடி பேசுவது பெருமை தான் மகிழ்ச்சி இருக்கு. ஆனால் எந்த நோக்கத்திற்காக கூறுகிறார் என்றால் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வது போன்ற நாடகமாட தான் சொல்கிறார். இன்று தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டு முதல்வர் திருக்குறளுக்கும் திருக்குறளை வாழ வைப்பதற்காக எடுத்திருக்கும் முயற்சி மிகப் பெரிய முயற்சி. மாணவர்கள் அதில் பயன் பெற்று வருகின்றனர். மாணவ செல்வங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை இது ஏற்படுத்தும் என தெரிவித்தார்.



